நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

31 December 2012

புதுவருடமும், முஸ்லீம்களும்


இன்று திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01 புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்துவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் திகதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

“அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?.

“அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).

ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது: ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.

அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வதற்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக்கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.

புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புரம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறு புரம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மிலியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றனர், எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.

இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா? இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள். (அபூதாவுத்).

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.

அல்லாஹ்வுக்கா நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழக்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).

இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவரான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது ” மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (68:4). என்று போற்றுகிறான் அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.

கிறிஸ்மஸை, ஜனவரி முதல் திகதியை, ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம், அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக்கூடாது என்பதில்தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்துகொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும்.

இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:

“அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.” (9: 62).

 நன்றி: இஸ்லம் கல்வி

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

07 November 2012

TNPSC குரூப் II (04-11-2012) கேள்விகளுக்கான விடைகள்




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்  12-08-2012 நடைப்பெற்ற TNPSC Group II (Aug 2012)  தேர்வு அன்று நடைபெற்றது. ஆனால் வினா தாள் முன்கூட்டியே வெளியானதால் அன்று நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான மறுதேர்வு நவம்பர் மாத 4ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் தேர்வாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. 40%-க்கு மேல் தேர்வு எழுத வரவில்லை.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் அத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  
    
PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.....


1GENERAL TAMIL & GENERAL KNOWLEDGE
2. GENERAL ENGLISH & 
GENERAL KNOWLEDGE


இரண்டு பகுதிகளுக்கான வினா விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்.

வெற்றிப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள். சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் தவறான தகவல்களை அளிக்கலாம் எனவே நீங்கள் அரசு இணையதளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.

01 November 2012

உபயோகமான இணையத்தளங்கள்

நாம் அன்றாட வாழ்க்கையில் இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதில் நன்மைகளும், தீமைகளும் சேர்ந்தே காணப்படுகிறது. அது பயன்படுத்துவரின் பயன்பாடுகளை பொருத்தது.

சில இணையதளங்கள் உலகத்தில் அதிகமானவரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் சிலவற்றை பார்ப்போம்.


30 October 2012

"நீலம்" புயல் தப்பிக்க சில வழிகள்...

டந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீலம் புயல் சென்னை நோக்கி வருவதால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலம் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சில வழிகளை பார்ப்போம்...

கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது. தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கம்பங்கள் சாயலாம்
பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்
புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்

சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்
புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.

மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்
மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது. தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அவசர உதவிக்கு...
புயல் மற்றும் மழை வெள்ளம் குறித்த விவரங்களை அறிய சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் தொலைபேசி எண்: 044-28447727 . சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

நன்றி! தட்ஸ் தமிழ்

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்...


28 October 2012

தினம் ஒரு தகவல்: மெட்ராஸ் பஞ்சம் (வரலாற்று சுவடுகள்)

சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.


23 October 2012

சிரிக்க!!! சிந்திக்க!! சில புகைப்படங்கள் (மின்சாரம்)

என் முகப்பக்கத்திலிருந்து...


நிலவை காட்டி சோறு ஊட்டினாள் - அன்று
நிலவு வெளிச்சத்தில் சோறு ஊட்டினாள் - இன்று
# மின்வெட்டு

20 October 2012

செல்போனும், மனிதனின் தீயஎண்ணங்களும்

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

18 October 2012

காணவில்லை (மின்சாரம்)

tneb


பெயர் : மின்சாரம்

வயது : சுமார் 200 ஆண்டுகள்

அடையாளம்: தொட்டால் ஷாக் அடிக்கும்

பெற்றோர்: பெஞ்சமின் பிராங்கிளின்

முகவரி: தமிழக மின்சார வாரியம்

பிரிவாள்வாடும் பிள்ளைகள்: பேன், லைட், கிரைண்டர், மிக்சி, அயர்ன்பாக்ஸ், பிரிட்ஜ் மற்றும் தமிழ்நாட்டு மக்கள்

அருமை மின்சாரமே உன்னை காணாமல் நாங்கள் (தமிழக மக்கள்) நிம்மதியான உறக்கம் இன்றி, மாணவர்களின் படிப்பு கெட்டு, பணிகள் கெட்டு, வியாபாரம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, வருமான்ம் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.. ஆகவே, நீ எங்கிருந்தாலும் உடனடியாக எங்களிடம் திரும்பி வந்து விடு....
இப்படிக்கு,
தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்ட அப்பாவி தமிழக மக்கள்

முக்கிய குறிப்பு:
கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் ...

08 October 2012

TNPSC GROUP IV தேர்வு முடிவுகள்

tnpsc
                                           
07-07-2012 அன்று நடைப்பெற்ற TNPSC GROUP IV 2012 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் இன்று வெளியிட்டுள்ளது. 

நீதிமன்ற வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது..

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.... 

GROUP IV RESULT CLIK HERE

அரசு ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் நம்ம ஊர் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

மேலும் அவர்களுடைய பணி சிறப்பாக அமைய வேண்டும் என இறைவனிடன் துவா செய்கிறேன்.....

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...




02 October 2012

TNPSC VAO (30-09-2012) கேள்விகளுக்கான விடைகள்



tnpsc

30-09-2012 நடைப்பெற்ற TNPSC VAO 2012 (30-09-2012) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்.. 

PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
....

1
GENERAL KNOWLEDGE
2. GENERAL TAMIL
3. GENERAL ENGLISH


மூன்று பகுதிகளுக்கான வினா விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்..

சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் நேற்றிலிருந்து தவறான தகவல்களை அளித்து வருகிறது.. அரசு இணைய தளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

அடுத்து வரும் TNPSC குரூப் II (மறு தேர்வு தேர்விற்கு தயாராகுங்கள்...

வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்...


இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்....

09 September 2012

மொபைல் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் சில வழிமுறைகள்

mobile battery

னிதனும், மொபைலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. அதனிடம் அடிமைபட்டு கிடக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை என்று கூட சொல்லலாம்...  அப்படிப்பட்ட மொபைலுக்கு உயிர்நாடி என்று சொன்னால் அது பேட்டரி தான். அத்தகைய பேட்டரியை நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து மிக விரைவில் அது தன் செயல் திறனை இழந்து விடும். பேட்டரியின் ஆயுட்காலத்தை கூட்ட சில யோசனைகள்:
  • புதிய மொபைல் வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் 1 மணி அல்லது 2 மணியில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள் 8 மணிநேரம் முடிந்த பின்பே சார்ஜரை நீக்குங்கள் .
  • முதல் சார்ஜிக்கு பிறகு எப்போது மொபைல் “பேட்டரி Low “ என காட்டுகிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஒரு பாயின்ட் அல்லது இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்க கூடாது 
  • மொபைலின் பேட்டரி mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா என சோதித்து பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணையவசதி உள்ள மல்ட்டிமீடியா மொபைலுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரி தேவை.
  • ரவு நேரங்களில் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் வழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி சார்ஜ் செய்வதால் உங்களது பேட்டரி விரைவில் பருத்து, பின் பயன்படாமல் போகும்.
  • புளூடூத் வசதி, வை-பை வசதி மற்றும் இணைய வசதியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் மற்ற நேரங்களில் அணைத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்திருந்தால் பேட்டரியின் திறன் குறைந்து கொண்டே வரும்
  • ரிங்டோனுக்கு முழு பாட்டையும் வைக்காமல் “கட்சாங்ஸ்” எனப்படும் குறுகிய பாடல்களையே ரிங்டோனாக வைத்தால் பேட்டரியின் திறன் அதிகமாக செலவழிக்கப்படுவது தவிற்கப்படும்
  • மொபைலை FM ரேடியா போல் எப்போதும் பாடல்களை பாட விடாதீர்கள். 
  • ங்களது மொபைலின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள் அனேகமாக அனைத்து மொபைல்களிலும் பவர்சேவர்மோட்(PowerSaverMode) இருக்கும் அதை ஆக்டிவேட்(Activate) செய்யுங்கள் இதனால் உங்களது பேட்டரி நீண்ட காலத்திற்கு வரும்.
  • வால்பேப்பர் மற்றும் ஸ்கீரின்சேவர்களில் பிக்ஸ்ல்கள்(Pixels) அதிகமுடைய படங்களை வைக்காதீர்கள் இதனால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீரும்
  • திக வெப்பமுள்ள இடங்களில் மொபைலையோ, பேட்டரியையோ வைக்காதீர்க்கள். இதனால் உங்களது பேட்டரி திறன் குறையக்கூடும்
  • கூடுமான வரையில் கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளையே வாங்குங்கள். 30 ரூபாயில் கிடைக்கிறது, 40 ருபாயில் கிடைக்கிறது என்று மலிவான, தரமற்ற பேட்டரிகளை வாங்காதீர்கள் இத்தகைய பேட்டரிகள் வெடித்து உங்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போல கம்பெனிகளின் ஒரிஜனல் சார்ஜர்களையே பயன்படுத்துங்கள் இதனால் ஏற்படும் மின் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.
இன்றைய சிந்தனை கார்னர்: நாம் முடிந்த அளவு ஒரு மரத்தினையாவது நடுவோம்,, அப்படியும் முடியாவிட்டால் இருக்கும் மரத்தினையாவது வெட்டாமல் இருப்போம்....

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

30 August 2012

கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு -இன்று ஆல்பர்ட் ஐஸ்ட்டீன்

albert einstein
Albert Einstein
1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி. உலக வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஐப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமானது ஹிரோஷிமா. மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாகக் கிழிந்தது நாகாசாகி. ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் அநியாயமாகப் பலியான அந்தச் செய்தி கேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மியழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச் சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

1879ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டைன். அவர் பிறப்பிலேயே ஓர் மேதை கிடையாது. உண்மையில் அவர் மூன்று வயது வரை பேசாததால் அவருக்குக் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் அவர் சராசரி மாணவராகத்தான் இருந்தார்.

அவருக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்த போது நான்கு வயது. ஒருமுறை அவருக்கு compass எனப்படும் திசை காட்டியைப் பரிசாகத் தந்தார் அவரது தந்தை. அதன் உள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே calculus என்ற கணிதக் கூறைக் கற்றுக் கொண்டார் ஐன்ஸ்டைன். பின்னர் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். அவரது கேள்விகளுக்குப் பதில் தர முடியாமல் ஆசிரியர்கள் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று அஞ்சியதாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது.

சிறு வயதிலிருந்தே வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக் காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசை மேதை மோசாட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்குத் திறமை இருந்தது.

அவருக்குப் பதினைந்து வயதான போது இத்தாலியின் மிலான் நகருக்கு அவர்கள் குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துப் போனதும் ஸ்விட்சர்லந்துக்குச் சென்றார் ஐன்ஸ்டைன். புகழ் பெற்ற Swiss Federal Polytechnic நுழைவுத் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு அவரைச் சேர்த்துக் கொண்டது அந்தப் பலதுறைத் தொழிற் கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சி பெற்றதும் ஸ்விஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டைன்.

அவருக்குக் கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை பதிவு செய்து அவற்றை ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாகப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதத் தொடங்கினார். 1905ம் ஆண்டு Zurichபல்கலைக் கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 

கண்ணுக்குப் புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டைன் Theory of Relativity என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்தக் கோட்பாடு மூலம் அவர் உவகுக்குத் தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான் E = mc(square). விஞ்ஞான உலகத்திற்கே அது ஒரு அடிப்படை மந்திரமாகக் கருதப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பைச் செய்த போது அப்போது அவருக்கு வயது 26தான்.

1921ம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் photo electric effect என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதலாம் உலகப் போரில் ஜெர்மனி கலந்து கொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டைன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த போது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்.

1939ம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்¢ஸ்டைன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டைத் தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகுவிரைவில் அணுகுண்டைத் தயாரிக்கக் கூடும் என்றும் அதில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டைன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டைன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டைனுக்குத் தெரியாமலேயே சொந்தமாக அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரலாற்றை ஒரு கணம் இருட்டடிப்பு செய்த நாகாசாசி ஹிரோஷிமா சம்பவம்.

E = mc(square) என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்தத் தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டைனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கறுப்புப் புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டைனின் கோட்பாட்டால் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபளின் பழைய ஏற்பாடு மாதிரி என்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பைபளின் புதிய ஏற்பாடு மாதிரி என ஓர் ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்று பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும் படி ஐன்ஸ்டைனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்தப் பதவியை ஏற்க மறுத்து விட்டார் ஐன்ஸ்டைன்.

ஸ்விட்சர்லாந்தில் பயிலும் போது மிலவா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார் ஐன்ஸ்டைன். இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார். பின் மணமுறிவு ஏற்படவே எல்சா என்ற உறவுப் பெண்ணை மணந்து கொண்டார். எல்சா சிறிது காலத்திலேயே இறந்து விட சுமார் இருபது ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டைன்.

அணுகுண்டு தயாரிப்பதற்கு அவருடைய சார்பியல் கோட்பாடுதான் அடிப்படை என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டைன். உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த அவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தனது 76வது வயதில் காலமானார்.

நவீன அறிவியல் ஐன்ஸ்டைனுக்கு மிகப் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் என்று ஒருவர் கேட்க, 
கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்து விட வேண்டும் என்று கூறினாராம்
 ஐன்ஸ்டைன்.  அவருக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஆழமான சிந்தனை. மற்றது அறியப்படாதவற்றைப் பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் வசப்படும்

நன்றி: வானம் வசப்படும் அழகிய பாண்டியன்

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்....

26 August 2012

சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்



நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா, பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார்.


19 August 2012

பெருநாள் நல்வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்! 

முப்பது நாட்களும் நோன்பு நோற்கக்கூடிய
உடல் சுகத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்நன்நாளில்... 


நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை
எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை
வழங்கி மகிழ்ச்சியுறுவோம்..

நம்முடைய ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி
ஏழை எளியவர்களுக்கு வழங்குவோம்....
சந்தோஷமான இந்த நன்நாளின் மகிழ்ச்சியை
உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்...
உலகத்தில் பல பகுதிகளில் வாழும் என் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த 
பெருநாள் நல்வாழ்த்துக்கள்
.....
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை நோன்பை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்...

                                                                 **************


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


TNPSC குரூப் II (12-08-2012) கேள்விகளுக்கான விடைகள்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்  12-08-2012 நடைப்பெற்ற TNPSC Group II (Aug 2012)  தேர்வுக்கு விடைகளை அறியும் ஆர்வத்தில் இருப்பீர்கள். ஈரோட்டில் வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்த தேர்வு செல்லாது மாற்றாக இத்தேர்வு வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்து விட்டது. வினாத்தாள் எப்படி வெளியானது என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    நீங்கள் எழுதிய அந்தத் தேர்வை அரசு நடத்திய மாதிரி தேர்வு என நினைத்துக் கொள்ளுங்கள். குரூப் 4 தேர்வு நடந்த அன்றிரவே வினாத்தாளை அரசு வெளியிட்டது.குரூப் 2 தேர்வு ரத்தானதால் விடைகளை அரசு வெளியிடவில்லை. தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றாலும், அதை தேர்வு எழுதி விடைகளை எதிர் பார்த்திருந்த மாணவர்களின் ஆர்வம் குறையவே இல்லை. 

   தேர்வு எழுதியவர்களுக்கு பயன்படும் வகையில் ரேடியன் ஐ.ஏ. எஸ் அகாடமியால் வெளியிடப்பட்ட  விரிவான பதில்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்களை மதிப்பீடு செய்ய விரும்பினால்... 

  PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

        தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.....



1
GENERAL KNOWLEDGE
2. GENERAL TAMIL


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்...

மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள்



கடலூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற் பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வரும் 2013ம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலை தேர்வு பயிற்சி மாணவர்களை தேர்வு செய்வதற்காக வரும் அக்டோபர் 7ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பாக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடலூரில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி வரைவிண்ணப்பங்கள் வழங்கப்படும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 4ம் தேதி மாலை.5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர பிரிவினர் எழுத்து மூலமாக மனுவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி, பி.ஏ.,பி.எஸ்சி., பி.காம்., மற்றும் தொழிற்பட்டப்படிப்பான பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (விவசாயம்), அங்கீகரிக்கப்பட்டபட்டப்படிப்புகள் படித்து முடித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வி, வயது, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களுடன் நகல்களை சரிபார்த்த பின்னர் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு மேற்பட்டவராகவும், பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 33 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

13 August 2012

குரூப்-2 தேர்வு ரத்து வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதன் எதிரொலி

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கூறினார்கள்.

கம்பைநல்லூரில் சுரேஷ் குமார் என்பவர் ரூ. 3 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்த தகவலையொட்டி 5 பேர் சிக்கியுள்ளனர். இதேபோல ஈரோட்டில் ஒரு பெண் கேள்வித்தாளை தேர்வுக்கு முன்னதாக வைத்திருந்ததாக தேர்வர்கள் புகார் கூறினர். இந்த 2 சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்தினார்கள்.

குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் எப்படி வெளியே வந்தது? இதை வெளியிட்டது யார்? துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கட்ட விசாரணை முடிந்து தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையினை டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு அனுப்பினர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகார்களையடுத்து தேர்வை ரத்து செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, குரூப்-2 தேர்வை ரத்து செய்வதாக நட்ராஜ் அறிவித்தார். மேலும் இத்தேர்வை மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து 10 நாளில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

                                                                                                     நன்றி: மாலைமலர்

11 August 2012

டி.என்.பி.எஸ்.சி-VAO பொதுத்தமிழ் (சாகித்ய அகாடமி)-பாகம்-2


பொதுத்தமிழ் பிரிவில் நாம் பார்க்க போவது சாகித்ய அகாடமி விருதுகளை பற்றி...

சாகித்ய அகாடமி விருது 1954, மார்ச் 12-ல் தோற்றுவிக்கப்பட்டது

இவ்விருது இந்திய அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட 24 இந்திய அலுவலக மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது பெற்ற புத்தக்த்திலிருந்து கேள்விகள் கண்டிப்பாக இடம் பெறும் வர்ய்ப்புகள் அதிகம்.. நடந்து முடிந்த TNPSC-IV-ல் கேள்வி இடம் பெற்றது என்பது யாவரும் அறிந்ததே...

தமிழில் சாகித்ய அகாடமி பெற்ற புத்தகங்கள்... 
ஆண்டுபுத்தகத்தின் பெயர்ஆசிரியர்பிரிவு
2011காவல் கோட்டம்சு.வெங்கடேசன்நாவல்
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைகள்
2009கையொப்பம்புவியரசுகவிதை
2008மின்சாரப்பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைகள்
2007இலையுதிர்காலம்நீல பத்மநாதன்நாவல்
2006ஆகாயத்திற்கு அடுத்த வீடுமு. மேத்தாகவிதை
2005கல்மரம்திலகவதிநாவல்
2004வணக்கம் வள்ளுவஈரோடு தமிழன்பன்கவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்துநாவல்
2002ஒரு கிராமத்து நதிசிற்பிகவிதை
2001சுதந்திர தாகம்சி.சு.செல்லப்பாநாவல்
2000விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி.க.சிவசங்கரன்விமர்சனம்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்கவிதை
1998விசாரணைக் கமிஷன்சா.கந்தசாமிநாவல்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்நாவல்
1996அப்பாவின் சினேகிதர்அசோகமித்திரன்சிறுகதைகள்
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்நாவல்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன்நாவல்
1993காதுகள்எம்.வி.வெங்கட்ராம்நாவல்
1992குற்றாலக்குறிஞ்சிகோ.வி.மணிசேகரன்நாவல்
1991கோபல்லபுரத்து மக்கள்கி.ராஜநாராயணன்நாவல்
1990வேரில் பழுத்த பலாசு.சமுத்திரம்நாவல்
1989சிந்தாநதிலா.ச.ராமாமிர்தம்சுயசரிதை
1988வாழும் வள்ளுவம்வா. செ. குழந்தைசாமிஇ.விமர்சனம்•
1987முதலில் இரவு வரும்ஆதவன்சிறுகதைகள்
1986இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்க.நா.சுப்பிரமணியம்இ.விமர்சனம்•
1985கம்பன் ; புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்இ.விமர்சனம்•
1984ஒரு கவிரியைப் போலலட்சுமி (திரிபுரசுந்தரி)நாவல்
1983பாரதி : காலமும் கருத்தும்தொ. மு. சி. இரகுநாதன்இ.விமர்சனம்•
1982மணிக்கொடி காலம்பி. எஸ். இராமையாஇ. வரலாறு#
1981புதிய உரைநடைமா. இராமலிங்கம்விமர்சனம்
1980சேரமான் காதலிகண்ணதாசன்நாவல்
1979சக்தி வைத்தியம்தி. ஜானகிராமன்சிறுகதைகள்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்விமர்சனம்
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிநாவல்
1975தற்காலத் தமிழ் இலக்கியம்இரா. தண்டாயுதம்இ.விமர்சனம்•
1974திருக்குறள் நீதி இலக்கியம்க. த. திருநாவுக்கரசுஇ.விமர்சனம்•
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்நாவல்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்நாவல்
1971சமுதாய வீதிநா. பார்த்தசாரதிநாவல்
1970அன்பளிப்புகு. அழகிரிசாமிசிறுகதைகள்
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1968வெள்ளைப்பறவைஅ.சீனிவாச இராகவன்கவிதை
1967வீரர் உலகம்கி. வா. ஜெகநாதன்இ.விமர்சனம்•
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்சரிதை நூல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி.ஸ்ரீ. ஆச்சார்யாசரிதை நூல்
1963வேங்கையின் மைந்தன்அகிலன்நாவல்
1962அக்கரைச் சீமையிலேமீ.ப.சோமுபயண நூல்
1961அகல் விளக்குமு. வரதராசன்நாவல்
1958சக்கரவர்த்தித் திருமகன்கி. இராஜாஜிஉரைநடை
1956அலைஓசைகல்கிநாவல்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளைகட்டுரை
*இலக்கிய விமர்சனம்   

இலக்கிய வரலாறு
                                                                                                             நன்றி: Wikipedia

VAO தேர்வுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளன... முழு முயற்சியோடு படியுங்கள். வெற்றி பெறுங்கள்... வாழத்துக்கள்....

இன்ஷா அல்லாஹ மீண்டும் அடுத்த பதிவில்...

உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லுங்கள்,