நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

17 August 2013

ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க சில எளிய முறைகள்!


belly, stomac

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும், நீண்ட நாட்களுக்கு மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி.

ஆகவே தொப்பையால் சிரமப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஆலோசனைகளை தமிழ் போல்டு ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்:
தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்:
தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்:

தொப்பை குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.


இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்:
இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்.

பூண்டு சாப்பிடவும்:
தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

அசைவ உணவுகளை தவிர்க்கவும்:
வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிடவும்:
தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.


பொரித்த உணவுகளை தவிர்க்கவும்:
தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.


காரமான உணவுகளை சாப்பிடவும்:
மசாலாப் பொருட்களான பட்டை, இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள காரமானது கொழுப்புக்களை கரைப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

நாமும் இதனை மேற்கொண்டு ஆரோக்கியமாக தொப்பை இன்றி வாழ முயற்சி எடுக்கலாமே!!

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்.......

12 August 2013

பிறப்பு சான்றிதழ் (ஒரு விழிப்புணர்வு பதிவு)

ந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.

இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதற்காக, கிராம/நகர பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும்.

பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

(குறிப்பு: அந்த பிறப்பு சான்றிதழ் நகராட்சியில் இருந்து பெற்றுக்கொள்ளும் போது அதில் எழுத்து பிழைகள் இருந்தால் உடனே திருத்தி கொள்வது மிக அவசியம்)

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்.......


10 August 2013

டி.என்.பி.எஸ்.சி - ஓரெழுத்து ஒருமொழி (தமிழ்)

மிழில் சில எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகிறது. அவற்றை பற்றி பார்ப்போம்...



                                                  தமிழ் ஓரெழுத்து சொற்கள்
 அ
 எட்டு
 ஆ
 பசு
  ஈ
 கொடு, பறக்கும் பூச்சி
  உ
 சிவன்
  ஊ
 தசை, இறைச்சி
  ஏ
 அம்பு
  ஐ
 ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  ஓ
 வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  கா
 சோலை, காத்தல்
  கூ
 பூமி, கூவுதல்
  கை
 கரம், உறுப்பு
  கோ
 அரசன், தலைவன், இறைவன்
  சா
 இறப்பு, மரணம், பேய், சாதல்
  சீ
 இகழ்ச்சி, திருமகள்
  சே
 எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு
  சோ
 மதில், அரண்
  தா
 கொடு, கேட்பது
  தீ
 நெருப்பு
  து
 கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  தூ
 வெண்மை, தூய்மை,
  தே
 நாயகன், தெய்வம்
  தை
 மாதம், தையல்
  நா
 நாக்கு
  நீ
 நின்னை
  நே
அன்பு, நேயம்
  நை
 வருந்து, நைதல்
  நொ
 நொண்டி, துண்பம்
  நோவு
 நோவு, வருத்தம்
  நெள
 மரக்கலம்
  பா
 பாட்டு, நிழல், அழகு
  பூ
 மலர்
  பே
 மேகம், நுரை, அழகு
  பை
 பாம்புப்படம், பசுமை, உறை
 போ
 செல்
 மா
 மாமரம், பெரிய, விலங்கு
 மீ
 உயரம், மேலே, ஆகாயம்
 மு
 மூப்பு
 மூ
 மூன்று
 மே
 மேல், மேன்மை
 மை
 அஞ்சனம், கண்மை, இருள், செம்மறி ஆடு
 மோ
 மோதல், முகர்தல்
 யா
 மரம், அகலம்
 வா
 அழைத்தல்
 வீ
 பூ, அழகு, பறவை
 வை
 வைக்கோல், கூர்மை வைதல், வைத்தல்
 வெள
 கெளவுதல், கொள்ளை அடித்தல்


இவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....


10 January 2013

புகை உங்களுக்கு நண்பனா? படியுங்கள்...

புகை (சிகரெட்)வரலாறு: ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம்.

புகைப்பது உயிர்க்கு இறுதிபயக்கும் (Smoking is Injurious to Health) என நாம் வாங்கும் சிகரெட் அட்டைகளிலேயே விளம்பரப்படுத்தப்பட்டும், புகைப்பவர்கள் புகைத்து கொண்டு தான் உள்ளனர். சொல்லப்போனால் ஊதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் உள்ளது. ஆனால் புகைப்பது தேவையற்ற வேண்டாட ஒரு கொடிய கெட்ட பழக்கம். இது என்றும் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.
         "புகை நமக்கு பகை" அவை வெறும் ஏட்டளவில் தான்...
புகை! மனிதனுக்கு பகை! என்பது வெறும் ஏட்டளவில் உள்ள வாசகம் தான் மாறாக நடைமுறையில் நாம் பார்ப்போமேயானால்,அது மனிதனுக்கு நண்பனாகவே திகழ்கிறது. எந்த அளவுக்கு எனில் மனிதனின் ஆறாவது விரலாக புகையிலையை உள்ளடக்கிய அந்த சிகரெட் திகழ்கிறது. மனைவி இல்லாமலும் இருந்து விடுவேன் மயக்கமில்லாமல் [புகை] ஒரு வினாடி கூட இருக்கமுடியாது என்று சொல்லும் புகை பிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகவும் சிகரெட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மனிதனுக்கு மத்தியில் அது ஏற்ப்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், எந்த அளவுக்கு மனிதன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
படித்தவர்களிடம் இதன் தாக்கம் அதிகம்: பொதுவாகவே எழுத படிக்க தெரியாதவர்களிடம் தான் எந்த ஒரு தீய பழக்கமும் பரவும். காரணம் அதை பற்றிய அறிவு அவர்களிடம் குறைவு என்பதற்குதான். மாறாக படித்து பட்டம் வாங்கி கிழித்ததாக சொல்பவர்கள், தான் இந்த புகை பிடிக்கும் போதைக்கும்,புகையிலையின் போதைக்கும் அடிமையாகிவருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிக்காத கிராமபுரத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள், என்று பாகுபாடு இல்லாமல் பெருகி வரும் இந்த போதை பழக்கத்தால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்,,,
                     "உயிரைக் குடிக்கும் உயிர்கொல்லி"

புகையிலையில் நிகோடின், பென்சோ பைரீன் என இரு நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றை "உயிரைக் குடிக்கும் உயிர்கொல்லிகள்" எனலாம். நிறமற்றவை, தனித்த நிலையில் இவை கொடிய நஞ்சுகள்.

ஒரு துளி நிகோடின், ஒரு முயலின் மேல் பட்டால் அது நடுங்கும், அதிர்ச்சி கொள்ளும்; இரு சிகரெட்டுகளில் உள்ள நிகோடினை ஊசிமூலம் செலுத்தினால் மடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் ஊதினால், ஒரு வாரத்தில்  400 மில்லி கிராம் நிகோடினை உட்செலுத்தியதற்து சமம். உடனே மரணம் உண்டாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடித்தால், ஓர் ஆண்டில் 840 கன சென்டிமீட்டர் புகைத்தார் (Tobacco Tar) உட்கொண்டது ஆகும்.

புகையின் தீமைகள்:
  • சிகரெட்டுப் புதை உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல் தான்.
  • இதயத்தில் குருதிநாளங்களை நிகோடின் குறுகலடையச் செய்கிறது. மாரடைப்பிற்கு முக்கிய காரணமே நரம்புகள் குறுகுவதே. கார்பன்டைஆக்சைடும் குருதி நாளங்களைக் குறுக வைக்கிறது
  • புகைப்பவர்கட்கு வைட்டமின் 'சி' குறைகிறது. குறையவே குருதி நாளங்களில் கொலஸ்ட்ரால் கூடி அதன் வழியைக் குறுகச் செய்கிறது
  • புகைத்துப் புகைத்துச் சுவை மாறுவதால், செரிமானம் கெட்டு விடுகிறது
  • கொழுப்பு உணவினை உண்ணும் வேட்கை அதிகமாகிறது. அதன் விளைவு குருதிக் கொலஸ்ட்ரால் கூடி மாரடைப்புக்கு வழிகோலுகிறது
  •  போதைக்கு அடிமையானவர்களுக்கு அடுத்த அதிர்ச்ச்சி என்னவென்றால், ஆண்மையின்மை. புகையிலையில் உள்ள அந்த  [நிகோடின்] நச்சு தன்மை விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விடுகிறது. இதனால் குழந்தை பாக்கியம் என்பது கேள்விக்குறியாக்கி விடுகிறது. இது கணவன் -மனைவி மத்தியில் கசப்புணர்வை உண்டாக்கி விடுகிறது.
  • புத்தி கூர்மையும் மங்கச்செய்கிறது இந்த புகை பழக்கம். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் புகைப்பவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாகவும், ஆரோக்கியமான மற்றும் நல்ல மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை காணப்படுவதாகவும் ஆய்வுகள் அறிவிக்கின்றன
  • புகையிலையில் உள்ள நிகோடின், பென்சோபைரின் போன்றவை புற்று நோய்க்கும் பாதை வகுக்கும்.
  • எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை விட புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
புகையிலையில் அம்மோனியா, ஆல்டிஹைடு, பினால் போன்ற காரம் மிகுந்த பொருட்கள், ஆர்செனிக் எனும் நச்சுப் பொருள், கார்பன் மோனாக்சைடு என்னும் நச்சு வாயும், நிகோடின், பென்சோபைரின் போன்ற நஞ்சுகளும் உள்ளன. புகைக்கும்போது இவையெல்லாம் உள்ளே சென்று அதனதன் வேலையைக் காட்டி விடுகின்றன.

இந்த புகை பழக்கத்தினால் சிறிது சிறிதாக நம்மையே நாம் மாய்த்து வருகிறோம். இப்படி நம்மை நாமே மாய்த்துக் கொள்வது தற்கொலைக்கு சமமானது. விஷத்தை அருந்தி ஒரே அடியாக உயிர் துறப்பதற்கு பதிலாக இந்த பழக்கத்தினால் சிறிது சிறிதாக உயிர் துறந்து வருகிறோம் என்பது தான் உண்மை.

இவ்வளவு கொடிய விஷம் உள்ள சிகரெட்டை நாம் விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் புகைவது சிகரெட்டாக இருந்தாலும் எரிவது நாமாகத்தான் இருப்போம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....