நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

05 January 2013

பாலியல் குற்றங்களுக்கான காரணங்கள்

புது டெல்லியில் மருத்துவப் படிப்பு மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அதேபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த சம்பவமும் அதனால் கண்டனங்கள், போராட்டங்கள் எழுப்பி மக்கள் கோவமும், கவலையும் அடைந்திருக்கிறார்கள் 

ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த சிலர் அதுவும் குறிப்பாக மகளிர், துபாய், சவுதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் போன்று இயற்றப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஒரு பெண்மணி கூறும்போது, 'தான் துபையில் பல ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அங்கே குற்றம் செய்தவர்களுக்கு மக்கள் மத்தியில், குற்றவாளிக்கு கசையடியும், மரண தண்டனையும் நிறைவேற்றுவதினைப் பார்த்ததாகவும் கூறினார். 

அது மட்டுமல்லாமல் சில அரசியல் தலைவர்கள் குறிப்பாக இந்திய நாட்டு ஜனாதிபதி மகனும், பாராளுமன்ற உறுப்பினரானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மந்திரியும், மதுரை ஆதீனமும் பெண்கள் கண்ணியமான உடை அணிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறி முற்போக்கு மகளிரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்னும் சிலர், பெண்கள் இரவு நேரத்தில் கணவரில்லாத ஆண்களுடன் செல்வதால் இதுபோன்ற குற்றம் நடக்கின்றது என்றனர்.

மதுரை ஆதீனம் ஒருபடி மேல் போய் பெண்கள் முஸ்லிம் மத பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார்.

ஒரு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் பாலியல் குற்றம் செய்யும் மைனர் சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் சினிமா, தொலைக் காட்சியில் வரும் பாலியல் தூண்டும் செய்திகள் தான் இளைஞர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று கூறுகின்றனர். மத்திய அரசும் இதுபோன்ற குற்றம் வராது தடுக்க அல்லது தண்டனை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி நியமித்துள்ளது.

இந்த அனைத்து தகவல்களும் தீ பற்றிய பின்பு அணைக்கும் செயலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இஸ்லாமிய ஷரியாத் சட்டம் வருமுன் காக்கும் சட்டம் என்றால் மிகையாகாது.

ஏக அல்லாஹ் இறக்கி வைத்த திருக்குரானும், மனித வாழ்விற்கு நன்னெறி போதித்த நபி பெருமானாரின் நற்போதனைகளும் மனிதனை மாக்காளாக மாறாது பாதுகாத்துக் கொள்ளும் கேடையமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது. 

போதை தலைக்கேறிவிட்டால் தாயென்றும், தாரமென்றும் குடிகாரர்கள் பார்ப்பதில்லை என்பதால் குடியினை தடை செய்து உள்ளது, அதற்கு இப்போது நடக்கும் அவலங்களே போதுமானது.

உடல் அங்கங்கள் கணவருக்கு மட்டும் தான் காட்டவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் பெண்கள் கண்ணியமாக இருக்க வழி செய்துள்ளது இஸ்லாம். தனக்குத் திருமணமானவளைத் தவிர அடுத்தப் பெண்களைப் பார்க்கும்போது தலை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றும், பெண்களிடம் கண்ணியம் தவறும் மிருக குணம் படைத்தவர்களுக்கு அவர்கள் உணரும் படி கடுமையான சட்டங்கள் வரையறுக்க பட்ட சட்டப் பொக்கிஷம் தான் ஷரியத் சட்டம். 

அது சரி நமது நாட்டிலும் கற்பழிப்பிற்கு கடுமையான சட்டங்கள் குற்றவியல் சட்டத்தில் உள்ளதே பின் எப்படி இந்தத் தவறுகள் நடக்கின்றது எனக் கேட்கலாம். 

நமது நாட்டில் பாலியல் குற்றவாளிகளை முகத்தினை மறைத்து நீதி மன்றத்திற்கு அனுப்பும் செயலினைப் பார்த்திருப்பீர்கள். 

ஆனால் ஷரியத் சட்டத்தில் குற்றம் செய்யும் நபர் வெட்கி தலை குனியும் அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதால் அவன் எங்கு என்றாலும் அவனை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேருடுகிறது. அவ்வாறு செய்யாததினால் ஆழ்வார் திருநகரில் பள்ளிச் சிறுமியினை கற்பழித்து கொன்ற கயவன் ஏற்கனவே அதுபோன்ற குற்றம் செய்து ஜாமீனில் விடுதலையாகி மறுபடியும் குடி வெறியில் அதே தவறினைச் செய்திருக்கின்றான்.

மனிதனால் இயற்றப் பட்ட சட்டத்தினுக்கும், இறைவனால் வழங்கப் பட்ட ஷரியத் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள்

1) மனிதனால் இயற்றப் பட்ட சட்டம் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவைகளின் கைப்பாவையாகி உள்ளது.அது காலப் போக்கில் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.

ஆனால் சரியத் சட்டம் ஏக அல்லாஹ் அருளால் இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு நிலையான சட்டம். மனிதன் வாழ்வில் அத்தனை தேவைகளுக்கும் வழி காணப்பட்டுள்ளது.

2) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நிலையானதல்ல. உதாரணத்திற்கு மது காங்கிரசு தமிழகத்தில் ஆண்டபோது திறந்து விடப் படவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் மதுவினை ஒரு வருமானம் வரும் துறையாக கருதினர். இன்றைக்கு மது விற்பனையால் ஆண்டுக்கு பதினெட்டாயிரம் கோடி வருமானம் என கணக்குக் காட்டப் படுகிறது.

ஆனால் ஷரியத் சட்டத்தில் மதுவினைக் குடிப்பதற்கும், விற்பனை செய்வதிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப்பாடு நேரத்திற்கு, அரசுக்கு ஏற்ப மாறுபட்டதில்லை.

3) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் வருங்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை. ஏனென்றால் அந்தச் சட்டத்தினால் பயன் பெறுபவர் பெரும்பாலும் அரசியல் வாதிகள் என்பதால்.

ஆனால் அல்லாஹ்விற்கு வருங்கால சந்ததியினைப் பற்றிய சிந்தனை இருப்பதால் அவர்கள் பயன்படும் படி சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பெண்கள் தங்கள் அங்க அடையாளங்கள் தன்னால் கைப்பிடிக்கும் கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்ற அளவிற்குத் தான் உடை உடுத்த வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. கணவனுடன் தான் பெரும்பாலும் பயணம் செய்யவேண்டும் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோருடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. அதுபோன்று செய்யாது தனிப் பட்ட ஆணுடன் இரவு நேரத்தில் பயணம் செய்ததால் டெல்லியில் துரதிஷ்டமான சம்பவம் நடந்தது என்றால் மிகையாகாது.

4) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் குறிப்பிட்ட ஒரு நாடு, அதன் மக்களைச் சார்ந்து இருக்கும்.

ஆனால் இஸ்லாமிய நாடு அனைத்திற்கும் பொதுவான சட்டமாக ஷரியத் சட்டம் அமையும். இஸ்லாமில்லாத நாடுகளிலும் ஷரியத் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தினைத் தவிர கடைப் பிடிக்கப் பட்டு வருவதினைக் காணலாம்.

5) மனிதனால் இயற்றப் படும் சட்டம் பொது இடத்தில் நன்னடத்தையும், அநாகரியத்தினை தடுப்பதாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதில்லை.

ஷரியத் சட்டம் நன்மையினைக் காத்து, தீமையினை தடுப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜினா என்ற விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மனிதனால் ஏற்படுத்திய சட்டம் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் வழங்கும் அளவிற்கு உள்ளது.

6) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நீதிப் படிப்பினை போதிக்கும் சட்டமாக அமையவில்லை.

ஆனால் சரியத் சட்டம் நீதி படிப்பினை போதிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.

7) மனிதனால் வடிவமைக்கப் பட்ட சட்டம் பொது அமைதிக்குப் பங்கம் வராதவரை அல்லது அந்தக் குற்றம் வெளி உலகிற்கு தெரியாதவரை குற்றமாகாது. திருமணமாகாத இருவர் ஒப்புதலுடன் உடல் உறவு கொள்வது குற்றமில்லை. 

ஆனால் மறைவானவற்றை அறியும் திறன் கொண்ட அல்லாஹ்வால் இயற்றப் பட்டச் சட்டம் மறைவான தீய செயலிலிருந்தும் மனிதனை காக்கின்றது. கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வதினை ஷரியத் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.

8) மனிதனின் சுயக் கட்டுப் பாடு தளரும்போது தவறுகள் நடக்கின்றன. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்காத பாலியல் குற்றவாளியாகத் தான் இருக்கின்றான். 

ஆனால் ஷரியத் சட்டமும், நபி பெருமானாரின் போதனைகளும் மனித ஒழுக்கத்தின் நீரூற்றாகும். ஆகவே தான் தனி மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிதானம் இழப்பதில்லை.

இஸ்லாமிய ஷரியத் தண்டனைகள்: 

ஜினா: மனவியினைத் தவிர கள்ள உடல் உறவு கொண்டவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவன் வெக்கித் தலை குனியும் அளவிற்கு நூறு கசையடிகள் தரப்படும்.

ஹோமோசெக்ஸ்: என்ற புணர்விற்கு மரண தண்டனை உண்டு. ஆனால் உலகில் பல நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன என்பது வெட்ககேடு என்றால் மிகையாகாது.

மது குடித்தால் இருபது முதல் நாற்பது வரையிலான கசையடி.

இவைகளை படித்து உணரரும் போது கற்பழிப்புகான காரணம் என்ன என்று நம்மால் உணரமுடியும்! அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் நன்கு அறிந்தவன்!

நன்றி: cuddalore Muslim Friend

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....